Tuesday, November 10, 2020

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் அவதார தின விழா

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் அவதார தின விழா

காஞ்சிபுரம்,நவ 10
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஜப்பசி மாத பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு பாலாபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மூலவர் அமர்ந்துள்ள இடத்துக்கு வலதுபுறத்தில் உள்ள பிலாத்துவாரத்திலிருந்து அம்மன் வெளிப்பட்டு பக்தர்களுக்கு சுயம்புவாக அருள்பாலித்து வருகிறார்.ஐப்பசி மாதம் பூர நட்சத்திரத்தில் அம்மன் அவதரித்த திருநாளை முன்னிட்டு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும்,சுவாமி வீதியுலாவும் நடைபெறுவது வழக்கம்.செவ்வாய்க்கிழமை அம்மன் அவதார தினத்தை முன்னிட்டு மாலையில் திருக்கோயில் பணியாளர்களால் பால்க்குடங்கள் எடுத்து வரப்பட்டு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.1008 லிட்டர் பாலாபிஷேகத்தை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்.மூலவர் காமாட்சி அம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து சரஸ்வதி,லெட்சுமி தேவியருடன் உற்சவரான காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய வளாகத்திற்குள் உலா வந்து நான்குகால் மண்டபத்துக்கு எழுந்தருளினார்.பின்னர் சியாமா சாஸ்திரிகள்,சுரேஷ் சாஸ்திரிகள்,கோபி சாஸ்திரிகள்,நடராஜ ச ôஸ்திரிகள் ஆகியோரால் அம்மனுக்கு புஷ்பாஞ்சிலியும் நடத்தப்பட்டது. விழாவில் திருக்கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு அம்மன் தங்கத்தேரில் ஆலய வளாகத்திற்குள் பவனி வந்து மீண்டும் கோயில் அலங்கார மண்டபத்தை அடைந்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகாரியம் விஸ்வநாத சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு ஆலய வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.கரோனா அச்சுறுத்தல் காரணமாக அம்மன் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியிலும்,தங்கத்தேரோட்ட நிகழ்விலும் குறைவான பக்தர்களே கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

படவிளக்கம்..அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி,லெட்சுமி தேவியருடன் பக்தர்களுக்கு காட்சியளித்த காமாட்சி அம்மன்
நன்றி:தினமணி 

No comments:

Post a Comment