Friday, September 3, 2021

குருவின் சிறப்பு

 *மன்னித்தல்  என்பது  இறைவனின் அகராதியிலேயே  கிடையாது  என்ற  கசப்பான  உண்மையை  நாம்  அனைவரும்  தெரிந்து கொள்ள வேண்டும்.*


***********************************************


  கல்லாப்  பிழையும்  கருதாப்  பிழையும்  

கசிந்து  உருகி நில்லாப்பிழையும்  நினையாப்பிழையும்  நின்ஐந்தெழத்தை 

சொல்லாப்  பிழையும்  துதியாப்பிழையும்  தொழாப்பிழையும்

எல்லாப்  பிழையும்  பொறுத்தருள்வாய்

கச்சி  ஏகம்பனே .


               --பட்டினத்தார் 


          இந்த  பாடலை  நம்மில்  பெரும்பாலோர்   அடிக்கடி  பாடி  இருப்போம். அதுவும்  பக்தி  மனநிலையில்  பாடி  இருப்போம். 


       ஆனால்  ஒரு நாள்  ஈஸ்வரன்  என்னை  பார்த்து  திட்டுவது  போல்  உணர்ந்தேன் .


  ஈஸ்வரன்  கேட்கிறார்  :-


  நான்  ஏன்டா  கல்லா பிழையை  பொருத்துக்கனும் ?


       நீ  உண்மையையும் ,  நீதியையும்,  ஆன்மாவை பற்றியும்   கற்று தெரிந்து  கொள்ள வேண்டும்  என்பதற்காக  தான்  உன்னை  பூமிக்கே  அனுப்பினேன். 


       நீ  என்னடான்னா இங்கு  வந்து  ஒழுங்காக குருவை நாடி  தீட்சை பெறாமல் கல்வியும் கற்காமல் என் கோவிலுக்கு  வந்து   " கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் ... பொருத்து அருள்வாய்  "  என்று  பிரார்த்தனை  செய்கிறாய் .


 ஒரு  உண்மையை  சொல்கிறேன்  :-


 தானமும்,   தவமும்,  பூமியில் மட்டும் தான் செய்ய முடியும்.   பூமியில் வாழும் காலத்தில் நீ தானம்,  தர்மம், தவம், செய்யாமல் வாழ்ந்து இறந்த பிறகு சூட்சும தேகத்தில்  இருக்கும்  போது தானம், தர்மம்  செய்ய வேண்டும்  கடவுளே என்று  என்னிடம்   பிரார்த்தனை  செய்தால்;  

         நான் என்ன சொல்வேன்;  அடப்பாவி  அதற்கு  தானே  உனக்கு  ஸ்தூல தேகம் கொடுத்து   பூமிக்கு  அனுப்பினேன்.   நீ என்னடா  என்றால்  அங்கு  ஒழுங்கா  எதையும்  கற்காமல் , தானமும்,  தவமும்  செய்யாமல் வாழ்ந்து விட்டு  இப்பவந்து  கேட்கிற.       


சரி என்ன பன்றது   மறுபடியும்  பூமியில்  போய்  பிறந்து  முறையாக  குருவை நாடி தீட்சை பெற்றும் கல்வி கற்றும்,   தானம்  தவமும்  செய்து  வாழ்ந்து விட்டு  வா  என்று  தான்  சொல்வேன். 


         மேல்  உலக வாழ்கை  என்பது   பூலோக  வாழ்க்கையின் போது செய்த  தானம்,  தவம், மற்றும்  பெற்ற  ஞானம்  போன்றவற்றிற்கான   பலனை  அனுபவிக்கிற  வாழ்கை  ஆகும். 


       " பதவி பூர்வ  புண்ணியானாம் "


   பூமியில்  வாழம் போது  100 அஸ்வமேத யாகம்  செய்தால்,  இறந்த பிறகு  சொர்க்கத்திற்கு  சென்றால்  அங்கு  இந்திர பதவியே  கொடுக்கப்படும்  என்பது  தான்  சாஸ்திரம்  ஆகும். 


       அதனால்  தான்  மகாபலி  அரசன்  100 அஸ்வமேத யாகம்  செய்தான்  என்பது  உனக்கு  தெரியாதா?

 

       ஒருவேளை  உனக்கு  சொர்க்கம் போன்ற  மகிழ்ச்சி  மற்றும்  பதவிகள்  மீது  எல்லாம்  பற்று இல்லை  என்றால்   முக்தி  அடைய வேண்டும்  என்பது  தான்  விருப்பம்  என்றால்  ;


      நீ  ஒரு  குருவை சரண் அடைந்து   ஸ்தூல தேகம் ,  சூட்சும தேகம்,   காரண தேகம்,   மகா காரண தேகம்,   போன்ற  உண்மைகளையும், பசு பதி பாசம்  போதிக்கிற   சைவசித்தாந்த கல்வியை  கற்க வேண்டும். 96 தத்துவங்கள் பற்றியும் ,   தசகாரியம் பற்றியும்  கற்க வேண்டும். 


      அப்படி  கற்றால்  தான்   அதன் படி வாழ்ந்து   ஸ்தூல தேகம்,  மனோதேகம்  போன்றவற்றில்  இருந்து  எல்லாம்   விடுபட்டுத்தான்   ஜீவன் முக்தி  நிலையை அடைய முடியும். 


     இந்த  சைவசித்தாந்தம்  கல்வியை  கற்பது  என்பது முக்தி  பிராப்தத்தை  விரும்பும்   மனிதனுக்கு  இன்றியமையாதது  ஆகும். 


       இந்த  சைவசித்தாந்தம்  கல்வியை  கற்பதற்காக  ஒருவன்  பிச்சை எடுத்தாலும்  தவறு  இல்லை  என்று 

 " வெற்றி வேற்கை  "  என்ற  நூலின்  மூலம்  உலகுக்கு  சொன்னேன் .


  " கற்கை  நன்றே  கற்கை நன்றே 

    பிச்சை  புகினும்  கற்கை  நன்றே "


பிச்சை  எடுத்தாவது   சைவசித்தாந்தம்  கல்வியை  படிடா   என்று  சொன்னல் ;  நீ  என்னடா என்றால்   " கல்லாப் பிழையும்  பொருத்து  அருள்வாய்  "  என்று  பிரார்திக்கிறாய்.


        சொல் பேச்சை  கொஞ்சம் கூட கேட்க மாட்டுங்கிற !!


        நீ  அப்படி  குருவை  நாடி  சென்று  கல்வி  கற்றாலும்   அந்த  கல்வி  அவ்வளவு  லேசில்  உன்  மனதில்  தங்கி விடாது .   அது  உலக மயக்கங்களால்   மறைந்து  மறந்து  போய்விடும் .


     அதனால்  தான்  சிவ தீட்சை பெற்று சைவசித்தாந்தம் கற்க வேண்டும், தினமும்  கற்ற கல்வியை  அசை போட  வேண்டும்  என்று  அறிவுருத்தினேன் . 


   " காலையும் மாலையும்  நான்மறை 

ஓதா அந்தணர்  என்போர்  அனைவரும் பதரே "


        -- வெற்றி வேற்கை 


 மேலும்  ஒளவையார்   வாக்கின்  வழியாகவும்    கல்வி  என்பது  மனப்பழக்கம்  என்று  அறிவுருத்தினேன். 


 "  சித்திரமும்  கைப்பழக்கம் ,   செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு  கல்வி   மனபழக்கம்  " 


கற்ற  சைவசித்தாந்தம்  உண்மைகளை  அவ்வப்போது படித்து  வர வேண்டும். அதை  நன்றாக மனதிற்கு  பழக்கப்படுத்திவிட  வேண்டும். 


        அப்போது தான்  அதன்படி  நடக்க, வாழ ,   உன் மனம்  ஆயத்தம்  ஆகும். 


அதனால் தான்  "ஓதா  கல்வி  கெடும் "  என்றேன். 


      ஒருமுறை  படித்துவிட்டால்   எல்லாம் உன் மனம்   சைவசித்தாந்தம்  நெறிப்படி வாழ   தயாராகிவிடாது.     மீண்டும் மீண்டும்   தொடர்ந்து கற்று  அதனுடனேயே பயணித்து  அதனுடனேயே கலந்து  அதுவாகவே உன் மனம்  மாறிவிட வேண்டும். 


      அப்படி பட்ட  நிலையை  அடைந்த பிறகு  தான்  ஸ்தூல தேகம்,  மனோதேகத்தை எல்லாம்   விட்டு  விலகி சென்று  சத்தான ஆத்மாவை  மகா காரண தேகத்தை  அடைய முடியும். 


     இப்படி  இருக்க  நீ  என்னடா  என்றால்   இந்த  பட்டினத்தாரின்  ஒரு   பாடலை  பிடித்து  கொண்டு    அடிக்கடி  என் முன்  வந்து   "  கல்லாப் பிழையும்  கருதாப் பிழையும்  .. "   என்று  வேண்டுகிறாய். 


        கல்லாப் பிழையை   எல்லாம்  ஈஸ்வரனாகிய  நான் பொறுத்துக் கொண்டு   திடீர்  என்று  உனக்கு  முக்தி நிலையை  கொடுத்தாலும், அது  முக்தி  என்று  உனக்கு  தெரியாது.   உன்னால்  அதை  உணர  முடியாது. 


       அதனால்  முட்டாள் தனமாக என் முன்  வந்து  கல்லா பிழையும்   கருதாப் பிழையும் ..   பொறுத்து அருள்வாய்   என்று  வேண்டாதே.


      2010 ம்  ஆண்டு  என்  கோவிலுக்கு  வந்து   கல்லா பிழையும்  கருதாப் பிழையும் என்று  பிரார்த்தனை  செய்தாய்.  சரி காலம்  போக போக நீ கல்வி  கற்றுக்கொள்ளலில்  ஆர்வம்  செலுத்துவாய்   என்று  பார்த்தேன் ; 


         ஆனால்   நீயோ   2015 ம்  ஆண்டும்   கோவிலுக்கு  வந்து  மறுபடியும்   கல்லா பிழையும்  கருதாப் பிழையும் என்று  பிரார்த்தனை செய்தாய் .


        சரி போகட்டும்  இனியாவது   சைவசித்தாந்தம்  உண்மைகளை  கற்பதில்  கவனம்  செலுத்துவாய்  என்று  பார்த்தால்  நீயோ   2021 ம்  ஆண்டும்   என்   கோவிலுக்கு  வந்து  மறுபடியும்  கல்லா பிழையும் கருதாப் பிழையும்    என்று பிரார்த்தனை செய்கிறாய் . 


 ஒரே பல்லவியையே   ஆயுள்  முழுவதும்  பாடுகிறாய்.   அதனையும்  உன்னை போல்   அறிவிலியாட்டம்   என்னையும்  கேட்க சொல்கிறாய். இது நியாயமா  என்று  சற்று  யோசித்துப் பார். 


      இந்த  ஆண்டு  கற்க வில்லையா  என் கோவிலில் வந்து  இந்த  பாடலை பாடிவிட்டு  அடுத்த  முறை  வரும் போது   கற்றுகொண்டு  வருகிறேன்  இறைவா   என்று  நீ  சொன்னால்  அது  நல்ல பிள்ளைக்கு  அழகு .  


        அதனால   சும்மா  ஓப்பி அடிச்சு  ,   இந்த  பாடலை பாடியே   பஜனை  பண்ணிட்டு  போய்டலாம்   கடவுள்  நமக்கு  முக்தி  கொடுத்து விடுவார்  என்று  என்னுகிறாயா !!


          நாட்டில்  நிறைய  அடியார்கள்  இப்படித்தான்  திரிகிறார்கள் .  


         நீயாவது  பரவாயில்லை   வேறு  ஒரு   முருகன் அடியார்    இருக்கிறான் .  அவன்   அடிக்கடி  முருகன் கோவிலுக்கு  சென்று  


 " ஏது பிழை  செய்தாலும்  ஏழையனுக்கு இறங்கி  தீது  புரியாத தெய்வமே  " 


 என்று  பாடுகிறான். 


          பக்தர்களாகிய  உங்களுக்கு  எல்லாம்  ஒன்றை  தெளிவாக  சொல்லி கொள்கிறேன்.   ஏது பிழை  செய்தாலும்   பொருத்து கொண்டு  தீது செய்யாதவர்கள்  மூவர்  மட்டும்  தான். 


     1.  அம்மா 

     2.  அப்பா 

     3.  குரு 

இந்த   மூவர்  மட்டும் தான்  தீது புரிய மாட்டர்கள்.  


மற்றபடி  தெய்வங்கள்  எல்லாம்   நீதி  பரிபாலனம்  செய்யும்  அதிதேவதைகள்  ஆகும். 


       அந்த  நீதி படி  அவரவர்களுக்கு  தண்டனையும்  நன்மையும்  கிடைக்கும் படி  நவகிரகங்களுக்கு    கட்டளை இட்டு   உலகை  பரிபாலனம் செய்து  வருகிறோம் .


       எனவே   ஏது பிழை  செய்தாலும்  எல்லாம்   தண்டனை  கொடுக்காமல்  விட்டு விட முடியாது. 


          சிவ பக்தனான   ராவணன்   நிறைய  பிழைகள்  செய்தான் .  தேவர்களோ   சிவனான  என்னிடம்  வந்து  முறையிட்டனர்.   


 நானோ  என் பக்தனை நானே  தண்டித்தல்   முறையாகாது .    அதனால்  விஷ்ணு விடம்  சென்று  பிராத்தியுங்கள் .    அவரால்  ராவணனை  தண்டிக்க முடியும்   என்று  நான்  ஐடியா  கொடுத்தேன் .


         ராவணன்  என் பக்தன்  என்பதற்காக  அவனை தண்டிக்காமலா  விட்டேன்  !!  சற்று  யோசித்துப் பாருங்கள்.  


        நாளாயினி  போன ஜென்மத்தில்  சூரியனையே  உதிக்காதபடி  செய்தால் ;   அதற்கு  தண்டனையாக  மறு ஜென்மத்தில்   பாஞ்சாலியாக  பிறந்து  கஷ்டப்பட்டால்.     அவள்  என்னை  கும்பிட்டால்  என்பதற்காக  அவளது  தவரை மூடி மறைத்து  தண்டிக்காமல்  விட்டேனா  என்ன !


          திருதிராஷ்டிரன்  போன ஜென்மத்தில்   100   அன்ன பறவைகள்  கறியை  சாப்பிட்டான்  அந்த  பாவம்  பலனாக  அடுத்த  ஜென்மத்தில்  கண் தெரியாத  திருதிராஷ்டிரனாக   பிறந்தான் .     அவன்   என்னை  கும்பிட்டான்  என்பதற்காக  அவனை தண்டிக்காமலா  விட்டேன். 


        தசரதன்   ஒரு  அப்பாவி  மனிதனை  கொன்றான்  .  அந்த  பாவத்துக்கு   தண்டனையாக  தான்  சாபம்  பெற்று  மாண்டான்.   என் பக்தன்  என்பதற்காக  அவனது  சாபம்  பலிக்காமல் போகும் படியா  செய்தேன்  ;  இல்லையே .


        இதில் இருந்து  எல்லாம்  நீங்கள்  தெரிந்து கொள்ள  வேண்டியது  என்ன ?   சர்வேஸ்வரனாகிய   நான்   நீதி தவறாதவன்  ஆவேன். என் பக்தனே ஆனாலும் தண்டிப்பேன் .


       அதனால்   மனிதர்களாகிய  நீங்கள்   தெய்வங்களாகிய   எங்களிடம்  வந்து  


    "  ஏது  பிழை செய்தாலும்  தீது  புரியாத  தெய்வம் "   என்று  சொல்லி  எங்களுக்கு  ஐஸ்  வைக்காதீர்கள் .    இதற்கு  எல்லாம்  மயங்குகிறவர்கள்   அல்ல  தெய்வங்கள். 


      "  எல்லா பிழையும்  பொருத்து  அருள்வாய்  "   என்று  பிழை செய்யும்  மனிதர்களாகவே  இருப்போம்  நீ தான்  பிழையை  பொருத்து  அருள வேண்டும்    என்பது போல   பிரார்த்தனை    செய்யாதீர்கள்.   


    தெய்வங்களின்  இயல்புகளையும் ,  அவர்களின் கடமைகளையும்  புரிந்து கொள்ளுங்கள் .     அப்போது  தான்  சரியான  முறையில்  நியாயமான முறையில்  பிரார்த்தனை  செய்வீர்கள் .


      எப்போதும்  தெய்வங்களிடம்  இவ்வாறு  பிரார்த்தனை  செய்யுங்கள்  :-


    " பிழை செய்யாமல்  தடுத்தருள்வாய்  "  என்று  பிரார்த்தனை  செய்யுங்கள் .   


    " நண்பனாய்  இருந்து  பிழைகளை  சுட்டி காட்டி  திருத்துவாய்  "  என்று  பிரார்த்தனை  செய்யுங்கள். 


    " அகத்தூய்மை  செய்வதில்  பேர் உதவி புரிவாய் "  என்று  பிரார்த்தனை செய்யுங்கள்.


        இவ்வாறு   ஈஸ்வரன்  என்னுள்  இருந்து   எனக்கு  உணர்த்தினார்.   


        ஆன்மீகவாதிகளான  ,  பக்தர்களான   நாம்   இந்த  புரிதல் உடன்  இருந்தால் தான்   வருங்காலத்தில்   நாம்   பிறருக்கு  உபதேசிக்கும் போது சரியான  பாதையை  காட்ட முடியும். 


              எனவே  இதனை மனதில்  கொண்டு  ஆக்க பூர்வமாக  பிரார்த்தனையை  செய்து  இறை அருளை  பெற முயல வேண்டும். 


       கல்லாப் பிழையும்   என்று  இருக்கிறதா ;   இனி மேலாவது   சைவசித்தாந்தம்  கல்வியை  படிக்க  முயல வேண்டும்.    


         அதனால்  இனி  கல்லா பிழையும்  என்ற  பேச்சே  நம்  வாழ்வில்  இருக்க கூடாது.  


     கருதா பிழையும்   என்று  இருக்கிறதா ;


               நம்முள்ளே  ஆன்மாவான சத்து சித்து ஆனந்தமான  சச்சிதானந்தம்  இருக்கிறது.   அதனை அடிக்கடி  கருத வேண்டும்.  நினைக்க வேண்டும்.   அதற்கு  வழி  என்ன  என்றால் ;    ஆன்மீக வாதிகள்  அடிக்கடி

" சச்சிதானந்தம்  "  என்று  சொல்லுங்கள்.  


       இப்படி   சச்சிதானந்தம்  என்று  சொல்லி  சிந்தித்து  கொள்கிற  முறையை  கடைபிடித்தோம்  என்றால்  தானாக  ஆன்மாவானது ஈஸ்வரனை  கருத ஆரம்பித்துவிடுவோம் .    இதனால்  கருதா பிழை  நம் வாழ்வில்  செய்ய மாட்டோம். 


    ஐந்து எழத்தை  சொல்லா  பிழையும் 

என்று  இருக்கிறதா ;


   உணவு  சாப்பிடும்  போதும்  "நமசிவாய வாழ்க

நமசிவாய வாழ்க  "   என்று  சொல்லி விட்டு  சாப்பிடுகிற  பழக்கத்தை  ஏற்படுத்திக் கொள்ளுங்கள் . மற்ற அடியார்களிடம் பேசும்போதும் நமசிவாய வாழ்க என்று சொல்லி விட்டு பேசுங்கள்


         இதனால்  நமசிவாய  என்ற  பஞ்சாட்சரத்தை   சொல்லாத  பிழை  நம்  வாழ்வில்  செய்ய  மாட்டோம். 


   துதியா பிழையும்  என்று  இருக்கிறதா ;


      சர்வேஸ்வரனை  துதிக்க  நமக்கு  தெரியவில்லையா   அல்லது  துதிக்க  நேரம்  இல்லையா   இதற்கு  தீர்வாக  நமது  செல்போனில்   சர்வேஸ்வரனை  துதிக்கின்ற     பாடலை  பதிவேற்றிக் கொள்ள வேண்டும்  .    அதனை  அலாரம்  டோனாக  வைத்து கொள்ள வேண்டும் . 


       காலையில்  எழும் போது   இந்த  அலாரம்  டோனை  கேட்டு கொண்டே  எழுந்து கொள்ள வேண்டும்  . 

 இதனால்   தானாக  நமது  உள்மனது  ஆனது  துதியை   உள்வாங்கிக் கொள்ளும்   தன்மையை  பெற்றுவிடும் .


      இதனால்   துதியா பிழை  என்ற  தவறு  நம்  வாழ்வில்  நடக்காது .  


     தொழா பிழை  என்று  இருக்கிறதா :-


           நமது  வீட்டு வாசலின் மேல் பகுதியில்  ஜோதிர் லிங்கம்  புகைப்படத்தை  மாட்டி வைத்து  விடுங்கள்.   அல்லது  உங்களுக்கு  பிடித்த  சதாசிவ மூர்த்தி  புகைப்படத்தை  மாட்டி  வைத்து  விடுங்கள். 


      தினமும்  வீட்டில்  இருந்து  வெளியே  கிளம்பும் போது    வாசலுக்கு  மேல் உள்ள  சதாசிவ மூர்த்தி படத்தை  தொட்டு   தலைக்கு மேல் கை வைத்து தொழுது விட்டு  செல்லுங்கள்.   இதனை  ஒரு  பழக்கமாக  வைத்து  கொள்ளுங்கள்.    


         இதனால்  நமது  கைகள் தலைக்கு  மேல் தூக்கி சாமியை  தொழுத  பலன் கிடைக்கும்.   இதனை  கடைபிடிப்பதால்    தொழா பிழை    என்ற  தவறில்  இருந்து  நாம்  விடுபட்டு  விடுவோம். 


            இப்படியாக  ஆன்மீகவாதிகளான ,   பக்தர்களான  நாம்  அனைவரும்  இனி  

            1.  கல்லா பிழை ,   

            2.  கருதா  பிழை ,

            3.   ஐந்து எழத்தை  சொல்லா பிழை, 

            4.   துதியா பிழை ,

            5.   தொழா பிழை .


 ஆகிய  ஐந்து  பிழைகளை  செய்யாது  வாழ்ந்து   சிறந்த  பக்தர்களாக திகழ்ந்து  இறையருளை  பூரணமாக பெற்று  வாழ்வோம்  .     


        சர்வேஸ்வரன்   எதிர்பார்ப்பதும்   இதைத்தான்.   ஏதாவது  ஒருவகையில்   இந்த  பிழைகளை  செய்யாது  வாழ  முயற்சி  எடுத்து கொள்கிறானா  என்று  தான்   பார்க்கிறார்.


 *நமசிவாய வாழ்க.*

No comments:

Post a Comment